கோவை மாவட்டம், வால்பாறை சாலக்குடி சாலையில் லாரியை ஆக்ரோசமாக தாக்க வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே இன்று வால்பாறையில் இருந்து சாலக்குடி நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரி மழுக்குப்பாறை தாண்டி சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தன. காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை மெதுவாக நிறுத்தினார்.
லாரியை கண்ட யானைகள் ஆக்ரோசமாக லாரியை தாக்க ஓடி வந்துள்ளது. இதனை கவனித்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டிருந்ததால் யானைகள் லாரியின் அருகில் வந்து நின்று கொண்டு திரும்ப சென்றது. இதனால் லாரி ஓட்டுநர் நூலிலைலையில் உயிர்தப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“