Advertisment

போரால் பாதிக்கும் பாலஸ்தீனம் : இன்ரேலுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி கோவையில் ஆர்ப்பாட்டம்!

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் எஸ்.டி.பி ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

author-image
WebDesk
New Update
SDBI

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே பாலஸ்தீன் அப்பாவி மக்கள் மீது கொடுமையான தாக்குதலை நடத்திய இஸ்ரேலை கண்டித்து கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

"பாலஸ்தீனில் ரஃபா" நகரில் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SDBI

இந்நிலையில் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் எஸ்.டி.பி ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹிம்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் V.M. அபுத்தாஹிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

SDBI

இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச்செயலாளர் அப்துல் காதர், செயலாளர்,வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம்  முகமது இசாக், மாவட்ட பொருளாளர் முகமது இக்பால், மாவட்டச் செயலாளர் மன்சூர்,மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், விமன் இந்தியா மூவ்மென்ட் தலைவி காமிலா பேகம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் செய்யது  ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராகவும், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும்  முழக்கமிட்டனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment