Advertisment

புதிதாக 30 நர்சிங், 6 மருத்துவ கல்லூரிகள்; மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. புதிதாக உருவான மாவட்டங்களில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிதாக 30 நர்சிங், 6 மருத்துவ கல்லூரிகள்; மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 30 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

Advertisment

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழு, 2022 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 6 எம்.பி.பி.எஸ் இடங்களை மாநில கவுன்சிலிங் மூலம் சேர்க்கை நடத்த திருப்பி அளிக்க வேண்டும் மற்றும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

இதையும் படியுங்கள்: 2300 நர்சுகளையும் சொந்த ஊரிலேயே பணியில் அமர்த்த நடவடிக்கை: அமைச்சர் மா.சு உறுதி

டெல்லியில் மத்திய மன்சுக் மாண்டவியாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. புதிதாக உருவான மாவட்டங்களில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம். மேலும், தற்போது உள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும், செவிலியர் படிப்புகளை தொடங்க விரும்புகிறோம். மத்திய அமைச்சர் கொள்கையை ஒப்புக் கொண்டு, இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்,” என்று கூறினார்.

புதிய நர்சிங் கல்லூரிகள் மனித வளத்தை உருவாக்குவது மட்டுமின்றி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மாணவர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதால், அங்கு கூடுதல் மனித வளத்தையும் உருவாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் மாநில மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க உதவும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை, சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி அமைச்சகங்களை வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் வரைவுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மதுரையில் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் புதிய திட்டங்களை வரைவதற்கு ஒப்பந்ததாரருடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்யும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்தார். மேலும், கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கூடுதலாக, 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசை தமிழக அரசு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment