வருகிற ஏப்ரல் 10, 2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்ட FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும், பொது மக்களிடம் முன்னறிவிப்புடன் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது எனவும் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.