Advertisment

ரயில் பாதை மின்தட பராமரிப்பு பணி: திருநெல்வேலி வரும் ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலிக்கு வந்து செல்லும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sub urban train

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

அதேபோல், பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் (16731) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் (16732) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (06687) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment