/indian-express-tamil/media/media_files/cOuJeD1N271rr0jI3sJV.jpg)
தெங்கு ரயில்வே ரகசிய வாக்கெடுப்பு
திருச்சியில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று, ரகசிய வாக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பது நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் நடைபெறும். கடந்த 2004-க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளி இறப்புக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த எஸ்.ஆர்.எம்.யு., ஐ.ஆர்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கெடுக்கும் தொழிலாளர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் தெற்கு ரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தங்களது பெயர் பணி விவரங்களை எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தொழிற்சங்கத்தினர்வாக்களித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.