தமிழக மாணவன் சண்டிகரில் மர்ம மரணம்! - | Indian Express Tamil

தமிழக மாணவன் சண்டிகரில் மர்ம மரணம்!

சண்டிகரில் உள்ள மருத்துக்கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன், மர்மமான முறையில் இறந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் சண்டிகரில் நேரு மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பயின்று வருகின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் கடந்த நவம்பர் மாதம், பிஜிஐஎம்இஆர்-ல் முதலாம் ஆண்டு ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு மேற்கொள்ள இந்த கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ண பிரசாத் நேற்று(26.2.18) காலை […]

தமிழக மாணவன் சண்டிகரில் மர்ம மரணம்!
சண்டிகரில் உள்ள மருத்துக்கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன், மர்மமான முறையில் இறந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் சண்டிகரில் நேரு மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பயின்று வருகின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் கடந்த நவம்பர் மாதம், பிஜிஐஎம்இஆர்-ல் முதலாம் ஆண்டு ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு மேற்கொள்ள இந்த கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ண பிரசாத் நேற்று(26.2.18) காலை தனது அறையில் தூக்கியிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காலை வெகு நேரம் ஆகியும், பிரசாத் தனது அறையின் கதவை திறக்காததால், கல்லூரி நிர்வாகம் ஊழியர்களை வைத்து கதவிஅ உடைத்துள்ளது. அப்போது பிரசாத், தூக்கில் தொங்கியபடி உயிர் பிரிந்த நிலையில் இருந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ண பிரசாத் இந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதலே, இந்தி மொழி அறியாமல் கடுமையாக சிரமப்பட்டுள்ளார். இந்தி மொழி அறியாமல் தவிப்பதாக சகமாணவர்களிடம் பல நாட்களாக புலம்பியுள்ளார்.

இதன் காரணமாக தனது படிப்பில் இருந்து விலகி தமிழகம் சென்று விடவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை எதிர்க் கொள்ள முடியாமல் கிருஷ்ண பிரசாத் தற்கொலை செய்துக் கொண்டதாக காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ண பிரசாத்தின் மரணம், அங்கும் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மாணவனின்  உடற்கூறு ஆய்வு இன்று(27.2.18) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாணவனின் மரணம் குறித்து அறிந்த கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோர்கள், அவரின் மரணத்தில் சந்தேகம் இறப்பதாக தெரிவித்துள்ளனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிருஷ்ண பிரசாத் தங்களிடன் ஃபோனில் பேசியதாகவும், தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு இந்தி மொழி காரணமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.மேலும், அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளதாகவும்  முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உ

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu student sucide in chandigarh medical colleage