விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்த கவர்னரை கண்டித்தும் ஜிப்மரில் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்படும் வரையும் போராட்டம் நடைபெறும் என திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நாளை புதன்கிழமை கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்த போராட்டத்தை திடீரென விடுதலை சிறுத்தை கட்சிகள் ரத்து செய்துள்ளது
விசாரித்ததில் தொல்.திருமாவளவன் போராட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கூறியதாக விடுதலை சிறுத்தை கட்சி வட்டாரம் தெரிவித்தது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil