கொரோனா பொது முடக்கநிலை காலத்தில் சில கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்ற அறிவிப்புடன் தமிழக அரசு மதுபான கடைகளை திறந்தது. இருப்பினும், சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவில்லை என்று கண்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும் பட்சத்தில், மதுபானங்களை ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்துள்ளது.
இருப்பினும், மது விற்பனை குறித்த வேறொரு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு, முன்னதாக விசாரிக்கப்பட்டது. அப்போது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து, ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும், பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும், என நீதிபதி அறிவுறுத்தினார். ஆகையால் தற்போது தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
மே- 7,8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் திறக்கப்பட்ட மதுக்கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. சமூக ஊடங்களில் 'டாஸ்மாக்' ஹஷ்டேக்கில் பலர் வேடிக்கையாக தங்கள் கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.
சில, வேடிக்கையான ட்வீட்களை இங்கே காணலாம்.
#டாஸ்மாக் திறப்பிற்கு பின் குடிமக்கள் எல்லோரும் மருத்துவர்களாக மாறிவிட்டார்கள்.
//#கொரோனா_நவ் ???????? pic.twitter.com/alULQmveOb
— Muniasamy Sakthivel (@Munis_AMMK) May 9, 2020
இனி ஆன்லைன் விற்பனை மட்டுமே!
டோர் டெலிவரினு வீடு வீடா இவங்கலே இரண்டு பாட்டில் கொடுத்துட்டு வம்படியா பணத்த புடுங்கிக்கலாம்ள!!
ஐடியா இல்லாத பசங்க#டாஸ்மாக் pic.twitter.com/YO1r8O6iTf
— ரவிசங்கர்® (@RavisankarBose) May 9, 2020
இன்னிக்கும் பழக்க தோஷத்தில 10 மணி க்யூல நிற்க போயி ஏமாந்துட்டேன் தம்பி pic.twitter.com/04qBItp9dL
— mohanram.ko (@mohanramko) May 9, 2020
காரணம் இல்லாம டாஸ்மாக் கடைகளை திறக்கலை, அது ஒரு ராஜதந்திர நடவடிக்கை...
எப்படி...?
ஆமா கையில் காசு இருக்கறதால தானே வெளியே நடமாடறாங்க. கடைகளை திறந்து அந்த காசை எல்லாம் பிடுங்கிட்டா வெளியே வரமாட்டாங்க இல்ல... கொரோனாவையும் கட்டுப்படுத்திடலாமே... எப்பூடி...? pic.twitter.com/jhfeM1FhDD
— சரவணன். ℳ (@saravankavi) May 9, 2020
பிரசவ வார்டுக்கு பிறகு நல்லபடியா டெலிவரி ஆகனும்னு நினைக்க வைத்துவிட்டது மதுப்பிரியர்களை
— ச ப் பா ணி (@manipmp) May 9, 2020
நான் கூட இதை பார்த்துட்டு ராணுவத்திற்கோ போலீசுக்கோ ஆள் எடுக்குறாங்கன்னு நினைச்சேன்..!#டாஸ்மாக் pic.twitter.com/Y9HR4lmudq
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) May 7, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.