ரத்ததானம் மூலமாக தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்: கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு

தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
ரத்ததானம் மூலமாக தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்: கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு

கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று (நவம்பர் 27) ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

Advertisment
publive-image

கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட செயலாளர் சைஃபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். சமீப நாட்களில் கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

publive-image
Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: