Advertisment

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீண்டும் கன மழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடியில் 31ம் தேதி கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
eee
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடியில் 31ம் தேதி கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், “தமிழகத்தில் இன்று இரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, 28.12.2023 : தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29, 30 டிசம்பர் :  தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31.12.2023: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

1.1.2024 மற்றும் 2.1.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48  மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

27, 28 டிசம்பர் : குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மால்தீவு பகுதிகள், தென்கிழக்கு  வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

29.12.2023: குமரிக்கடல் – பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

30, 31 டிசம்பர் : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. 

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment