/indian-express-tamil/media/media_files/2025/07/09/madras-high-court-2-2025-07-09-21-54-14.jpg)
Today Latest Live News Update in Tamil 04 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 04, 2025 13:59 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சி.பி.ஐ விசாரணை கோரி மனு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு தாப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
-
Aug 04, 2025 13:22 IST
புதிய டிஜிபி நியமன விவகாரம் - வழக்கு தள்ளுபடி
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
Aug 04, 2025 13:10 IST
சிறுமியை கடித்த ராட்விலர் நாய்
தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியின் முகத்தில், கொடூரமாக கடித்த ராட்விலர் நாய். நாயின் வாயை பிளந்து சிறுமியை கஷ்டப்பட்டு காப்பாற்றியதாக தந்தை தகவல். சிறுமிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. ஆர்.கே.நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது.
-
Aug 04, 2025 12:55 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை-சிபிஐ விசாரணை கோரி வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு தாப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
-
Aug 04, 2025 12:43 IST
கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது
திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
-
Aug 04, 2025 12:41 IST
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செய்யாறில் 9 செ.மீ. மழை பதிவு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேடவாக்கம், தாம்பரத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
-
Aug 04, 2025 12:41 IST
சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி இரங்கல்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களுக்கு போராடியவர் சிபு சோரன் என புகழஞ்சலி செலுத்தினார்.
-
Aug 04, 2025 12:31 IST
ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
Aug 04, 2025 12:03 IST
இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள் - ராகுல் காந்தி மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்
இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள் என்றும் ராகுல் காந்தியை கடிந்து கொண்டுள்ளது. இதனிடையே, அவதூறு வழக்கு என்ற பெயரில் ஒருவருக்கு தொல்லை அளிக்கக்கூடாது என ராகுல் காந்தி தரப்பு வாதிட்டுள்ளது.
-
Aug 04, 2025 11:41 IST
உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம்
டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம் அனுப்பி உள்ளார். டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த சாணக்யாபுரி பகுதியில் நடைபயிற்சியின்போது சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு நடந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்யுமாறு கடிதத்தில் சுதா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
-
Aug 04, 2025 11:39 IST
மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
Aug 04, 2025 11:36 IST
”EV வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான்”
இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தியாவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட் என்றார்.
-
Aug 04, 2025 11:20 IST
மாடுகளை அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் மீது வழக்கு
வனத்துறையின் தடையை மீறி பேரிக்காடுகளை தூக்கி எறிந்து சீமான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் தடையை மீறி நாட்டு இன மாடுகளை மலை பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50 நபர்கள் குறித்து விசாரணை செய்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
-
Aug 04, 2025 10:58 IST
வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரம்- ஸ்டாலின் கண்டனம்
உள்துறையின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை வங்கமொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பாடல் எழுதப்பட்ட வங்கமொழி மீதான நேரடி தாக்குதல். நாட்டின் பன்முகத் தன்மையை சிறுமைப்படுத்தும் செயலில் உள்துறை ஈடுபட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது X பதிவில், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை “வங்காள மொழி” என்று வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Aug 04, 2025 10:54 IST
த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றமா?
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. 18 முதல்22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 04, 2025 10:53 IST
வின்ஃபாஸ்ட் EV கார் ஆலையை திறந்து வைத்த ஸ்டாலின்
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.16,000 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம். மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப் 6, வி.எப் 7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
-
Aug 04, 2025 10:18 IST
கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டுள்ளனர். தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடனான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது. மீண்டும் எங்கள் உறவை, இணைக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Aug 04, 2025 10:13 IST
தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK
தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீட்டில் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்ட் தொழிற்சாலையை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான YEEMAK. இதன்மூலம் 7,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
-
Aug 04, 2025 10:06 IST
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஸ்டாலின்
தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் கார் முதல் விற்பனை தொடக்க விழா ஆகியவை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.
-
Aug 04, 2025 10:03 IST
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு - காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தின் போது எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது
-
Aug 04, 2025 10:01 IST
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மரணம்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம். கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81), சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்று அவர் உயிரிழந்தார்.
-
Aug 04, 2025 08:46 IST
திருப்பதியில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக நடிகர் சூர்யா தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வெளியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
-
Aug 04, 2025 08:24 IST
"பகவான் கிருஷ்ணரை முதல்வர் வேண்டியதால் மழை பெய்கிறது"
பகவான் கிருஷ்ணரை முதலமைச்சர் வேண்டியதால் மழை பெய்வதாக ராஜஸ்தான் அமைச்சர் கே.கே.விஷ்ணோய் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையின் பொறுப்பை கடவுள் மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது,
-
Aug 04, 2025 08:20 IST
பீகாரில் கனமழை: திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பாட்னாவில், திறந்து மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலத்தில் சேதமடைந்துள்ளது, 422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் நடுவே பள்ளம் உருவானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
Aug 04, 2025 08:19 IST
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
-
Aug 04, 2025 08:17 IST
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு: அரங்கத்தை ஆய்வு செய்த கீதா ஜீவன்
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள அரங்கில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கீதா ஜீவன்
-
Aug 04, 2025 07:24 IST
ஸ்டாலினுடனான சந்திப்பில் எவ்வித அரசியலும் இல்லை- ஒ.பி.எஸ்.
நலம் விசாரிக்கவும், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பில் எவ்வித அரசியலும் இல்லை. இந்த சந்திப்பை அரசியல் ஆக்குவது நாகரீகமற்ற செயல். என் மனைவி மற்றும் தயார் இறந்தபோது என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் மு.க.ஸ்டாலின் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.