Chennai News Updates: உத்தரகாசியில் திடீர் வெள்ளம், மண்சரிவு; ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
flash flood

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 05, 2025 22:19 IST

    உத்தரகாசியில் திடீர் வெள்ளம், மண்சரிவு; ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், 8 முதல் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாசியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஊரில் முகாமிட்டிருந்த வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    தங்கள் வீரர்கள் காணாமல் போன நிலையிலும், இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாராலி கிராமம் மற்றும் ஹர்சால் இராணுவ முகாம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பலர் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • Aug 05, 2025 21:55 IST

    மு.க. ஸ்டாலினுடன் பெ.சண்முகம், திருமாவளவன், முத்தரசன் புதன்கிழமை சந்திக்க திட்டம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்திக்கின்றனர்.



  • Advertisment
  • Aug 05, 2025 21:31 IST

    அந்தரங்க வீடியோக்கள் நீக்கினாலும் பரவுகிறது -  ஐகோர்ட் கவலை 

    இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக்கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், ராமாயணத்தில் வெட்டப்படும் ராவணன் தலை மீண்டும், மீண்டும் முளைப்பது போல அந்தரங்க வீடியோக்கள் நீக்கினாலும் பரவுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சட்டவிரோத இணையதளங்களை முடக்கியது போல இந்த இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • Aug 05, 2025 20:41 IST

    ஜாகுவார், லேண்ட் ரோவர் நிறுவனங்களின் சி.இ.ஓ-வாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி பாலாஜி நியமனம்

    டாட்டா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைமைச் செயல் அதிகாரி இவர்தான். பி.பி. பாலாஜி இதற்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், அதற்கு முன்பு யூனிலீவர் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 05, 2025 20:24 IST

    கேரளாவில் அங்கன்வாடி உணவு மெனுவில் பிரியாணி சேர்ப்பு - அமைச்சர் வீணா ஜார்ஜ்

    கேரளாவின் திருத்தப்பட்ட அங்கன்வாடி ஊட்டச்சத்து மெனு வெளியிடப்பட்டுள்ளது. “நாட்டில் அங்கன்வாடிகளின் வரலாற்றில் பிரியாணி, புலாவ் மற்றும் பிற பொருட்களை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை”  கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.



  • Aug 05, 2025 19:39 IST

    மதுரையில் ஆக.21-ம் தேதி த.வெ.க-வின் 2-வது மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, முன்னர் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 25-க்கு பதிலாக ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை 4.00 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.



  • Aug 05, 2025 19:19 IST

    அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

    வர்த்தக உறவுகள் குறித்த அமெரிக்காவின் அதிருப்தி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Aug 05, 2025 18:41 IST

    கலைஞர் பல்கலை., மசோதா - ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

    கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்



  • Aug 05, 2025 18:25 IST

    போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி

    ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Aug 05, 2025 17:49 IST

    ”ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை வேண்டும்”

    ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ராவணின் தலை வெட்டப்படும்போது மீண்டும் முளைப்பது போல் வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபரேஷன் சிந்தூரின்போது சட்டவிரோத இணையத்தை முடக்கியதுபோல நடவடிக்கை தேவை என்று நீதிபதி கருத்து கருத்து தெரிவித்துள்ளார்.



  • Aug 05, 2025 17:35 IST

    பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம்

    பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னேற்றக் கழக பொள்ளாச்சி நகரத்தின் சார்பில், 13.8.2025 – புதன்கிழமை காலை 10 மணியளவில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Aug 05, 2025 17:14 IST

    உத்தரகாண்டில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது. தற்போது வரை 20 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 05, 2025 16:53 IST

    மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மோடி இரங்கல்

    உத்தரகாண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • Aug 05, 2025 16:30 IST

    கலைஞர் பல்கலை. மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த ஆளுநர்

    கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்து உள்ளார். துணைவேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணம்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியது. கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 



  • Aug 05, 2025 16:29 IST

    மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி

    உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வருவதால், தாராலி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கீர் கங்கை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவுகிறது.

     



  • Aug 05, 2025 16:15 IST

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - ஆலோசனை

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மழை காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 05, 2025 16:07 IST

    தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாகத் தகவல்

    தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 14 வனக்கோட்டங்களில் 177 வரையாடு வாழ்விடப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24 முதல் 27 வரை 4 நாட்கள் 8000 பேர் பங்களிப்பு உடன் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் வரையாடுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது.



  • Aug 05, 2025 16:05 IST

    ஆக.14ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

    ஆக.14ல் தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 05, 2025 15:37 IST

    மேகவெடிப்பால் ஏற்பட்ட சேதம்: அமித் ஷா ஆலோசனை

    உத்தரகாசியின் தாராலி (உத்தரகாசி) பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உடன் தொலைபேசியில் பேசினார். ஐ.டி.பி.பி மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தோ-திபெத் எல்லைப் படையின் (ITBP) 16 பேர் கொண்ட குழு, உத்தரகாசியில் மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்திற்கு மீட்புப் பணிகளில் உதவுவதற்காக வந்துள்ளது.



  • Aug 05, 2025 15:37 IST

    உத்தரகாசியில் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு

    உத்தரகாண்ட், உத்தரகாசியில் மேகவெடிப்பால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  காவல்துறை, ராணுவம், பேரிடர் மீட்புக்குழு இணைந்து மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



  • Aug 05, 2025 15:34 IST

    எதிர்க்கட்சியை முழுமையாக இருட்டடிப்பு செய்கிறார்கள்: எம்.பி. திருச்சி சிவா

    டெல்லி: மாநிலங்களவையில் சிஐஎஸ்எஃப் (CISF) வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், "மாநிலங்களவையின் செயல்முறைகள் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் ஒளிபரப்பப்பட்டால், என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவர்கள் எதிர்க்கட்சியை முழுமையாக இருட்டடிப்பு செய்கிறார்கள்... உறுப்பினர்கள் தங்கள் குரலை எழுப்பும்போது, அவர்கள் (சிஐஎஸ்எஃப்) உள்ளே நுழைகிறார்கள்... சிஐஎஸ்எஃப்-க்கு அங்கே என்ன வேலை? அவர்கள் மார்ஷல்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் மார்ஷல்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மார்ஷல்கள் போல் உடையணிந்துள்ளனர், ஆனால் அவர்கள் சிஐஎஸ்எஃப் வீரர்கள்... நாடாளுமன்றத்தில் நமது ஜனநாயகம் எங்கே?" என்றார்.



  • Aug 05, 2025 15:32 IST

    பொதுமக்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்

    தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை கண்டால் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    தொடர்புக்கு : 94987 94987



  • Aug 05, 2025 15:31 IST

    தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? எல்.முருகன்

    4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் எவ்வளவு?
     
    தமிழக மக்களின் நலனுக்காக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்ற பெயரில் திமுக மேற்கொள்வது போலியான விளம்பர பிரசாரம். ராக்கெட் ஏவுதளம், விமான நிலைய விரிவாக்கம் என தென்மாவட்ட வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால், தமிழக அரசு தங்கள் பெயரில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது.
    தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பதை தமிழக மக்களுக்கு திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


    - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

     



  • Aug 05, 2025 15:27 IST

    மதுரை ஆதீனம் உயர்நீதிமன்றத்தில் மனு

    மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Aug 05, 2025 15:25 IST

    உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    மழை காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 05, 2025 15:01 IST

    மு.க.ஸ்டாலின் இரங்கல்!

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     



  • Aug 05, 2025 14:47 IST

    புதிய பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் ரூ.6.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நடுநிலைப் பள்ளி கட்டடம் மற்றும் இரண்டு அங்கன்வாடி கட்டடங்களையும் திறந்து வைத்தார்.



  • Aug 05, 2025 14:40 IST

    தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

    தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் கடந்தாண்டை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

    14 வனக்கோட்டங்களில் 177 வாழ்விடப் பகுதிகளில் கடந்த ஏப்ரலில் 800 பேர் பங்களிப்புடன் இந்த கணக்கெடுப்பு நட்த்தப்பட்டது.

     



  • Aug 05, 2025 14:39 IST

    அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனையாகிறது.

     
    தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்லை செயின்-ஐ அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது"

    - பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி



  • Aug 05, 2025 13:58 IST

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார்

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மே 11 முதல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Aug 05, 2025 13:43 IST

    கிங்டம்' படத்திற்கு வைகோ கண்டனம்

    கிங்டம் தெலுங்கு திரைப்படத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ள கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வலியுறுத்தியுள்ளார். 



  • Aug 05, 2025 13:39 IST

    தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரிப்பு

    தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் தெரிவித்துள்ளது.



  • Aug 05, 2025 13:38 IST

    புதுவலிமையை பெற்றேன் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, இன்று புது வலிமையைப் பெற்றேன். நலம் விசாரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Aug 05, 2025 13:16 IST

    போலீசார்- நாம் தமிழர் இடையே தள்ளுமுள்ளு

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்‘ திரைப்படத்தை ராமநாதபுரத்தில் திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு; திரையரங்கு முன்னர் முற்றுகை போராட்டம் நடத்தியதால், போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ‘கிங்டம்’ திரைப்படம் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்



  • Aug 05, 2025 12:57 IST

    பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்

    பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என சிசிடிவியை ஹேக் செய்து கண்காணித்ததாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உமாதேவியிடம் ராமதாஸ் சார்பில் புகார்மனு அளிக்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட வைஃபை மோடத்தை டி.எஸ்.பியிடம் ராமதாஸின் நேர்முக உதவியாளர் ஒப்படைத்தார்.



  • Aug 05, 2025 12:49 IST

    மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

    சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்ற மாணவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மருத்துவமனையில் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த மாணவி ஒரு கல்லூரி மாணவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த‌து போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 



  • Aug 05, 2025 12:34 IST

    கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு - காட்சிகள் ரத்து 

    ராமநாதபுரத்தில் கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், தியேட்டர் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பு காரணமாக கிங்டம் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Aug 05, 2025 12:33 IST

    11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும்

    11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெறலாம்.



  • Aug 05, 2025 12:25 IST

    ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு - அனில் அம்பானி ஆஜர் 

    ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் விசாரணைக்கு ஆஜரானார். அனில் அம்பானியின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.



  • Aug 05, 2025 12:06 IST

    வாக்காளர் பட்டியல் திருத்த‌த்திற்கு எதிர்ப்பு - கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

    வாக்காளர் பட்டியல் திருத்த‌த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி எழுந்த நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Aug 05, 2025 11:50 IST

    ரூ.9.74 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

    சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல்  பள்ளி கட்டடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு,  மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

     



  • Aug 05, 2025 11:31 IST

    2-வது ஷோரூமை திறக்கும் டெஸ்லா நிறுவனம் 

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஏரோசிட்டி பகுதியில் வரும் 11 ஆம் தேதி இரண்டாவது ஷோரூம் திறக்கப்படும் என டெஸ்லா அறிவித்துள்ளது. டெல்லியில் திறக்கப்படும் இந்த ஷோரூம் மூலம், டெஸ்லா தனது மின்சார வாகனங்களுக்கான விற்பனை மற்றும் விநியோகத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாடல் Y போன்ற கார்கள் இந்த ஷோரூம் மூலம் கிடைக்கும். 

    முன்னதாக  மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூம் திறந்தது குறிப்பிடத்தக்கது. 



  • Aug 05, 2025 11:28 IST

    நாடாளுமன்ற கூட்டம் - மோடிக்கு பாராட்டு

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிந்தூர், மகாதேவ் நடவடிக்கை வெற்றி குறித்து, என்.டி.ஏ  நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் இயற்றியுள்ளனர். 

     



  • Aug 05, 2025 10:27 IST

    பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்

    சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே  பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்க உள்ளதாகவும், சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில் 
    மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 05, 2025 10:24 IST

    ஆக.21-ம் தேதி மாநாட்டை நடத்த த.வெ.க முடிவு

    தவெக மாநில மாநாட்டை  ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியது. காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 05, 2025 09:42 IST

    அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவு

    நடிகர் அஜித்குமாரின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான  திரைப்பயணம் என ஷாலினி அஜித் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்" என பதிவிட்டுள்ளார்.



  • Aug 05, 2025 08:47 IST

    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கடலூர், மயிலாடுதுறை, நாகை,கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை
    லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக,வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 05, 2025 08:15 IST

    இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை விளக்கம்

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது. இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.



  • Aug 05, 2025 08:14 IST

    அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரட்டை நிலைப்பாடு: இந்திய வெளியுறவுத்துறை

    2024 ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் இந்தியாவை விடவும் அதிகம். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதை சுட்டிக்காட்டி, "இரட்டை நிலைப்பாடு" 
    என இந்திய வெளியுறவுத்துறை விமர்சித்துள்ளது.



  • Aug 05, 2025 08:13 IST

    அமெரிக்காவின் வரிவிதிப்பு - ரஷ்யா கடும் பதிலடி

    அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிகளை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை பதிலடி தந்துள்ளது. புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது,



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: