Advertisment

ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: சென்னை போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

ஜன.9-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN Bus
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை

வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் வரும் ஜனவரி 9-ம் தேதி போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் உடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Advertisment

பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி  போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்ககத்தினர் அறிவித்தனர். தொடர்ந்து போராட்டம் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஜன.6)பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜன.7) மீண்டும் தொழிற்சங்கங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம், அதுவரை போராட்ட முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மீண்டும் தெரிவித்தனர். இந்நிலையில், வருகிற 9-ம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 

அறிவித்துள்ளது. 

பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையாணை விதிகளின்படி, சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் யாரக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. ஜனவரி 9-ல் வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment