Advertisment

கண் நீர் அழுத்த விழிப்புணர்வு மனித சங்கிலி: திருச்சியில் இலவசம் பரிசோதனை

மனித சங்கிலிக்கு தலைமை மருத்துவர் அர்ச்சனா தெரசா தலைமை வகித்தார். பொது மேலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார்.

author-image
WebDesk
New Update
Trichysa

மனித சங்கிலி விழிப்புணர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருச்சி தி ஐ ஃபவுண்டஷன் கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த விழிப்புணர்வு மனித சங்கிலி திருச்சியில் நடைபெற்றது.

Advertisment

இந்த மனித சங்கிலிக்கு தலைமை மருத்துவர் அர்ச்சனா தெரசா தலைமை  வகித்தார். பொது மேலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார். இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் தங்கள்  கரங்களில் விழிப்புணர்வு பதாகைளை ஏந்தி நின்றனர். கண் நீர் அழுத்த  விழிப்புணர்வு வாசகங்களை ஊழியர்கள் கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், இந்த  விழிப்புணர்வு  வாரத்தை முன்னிட்டு ஒரு வாரம்  (10.03.2024 முதல்  16.03.2024) மருத்துவமனையில்  நோயாளிகளுடன் வருபவர்களுக்கு கண் நீர் அழுத்த பரிசோதனை  இலவசமாக செய்யப்படும் என்றும்  கண் நீர்  அழுத்த  நோய் பற்றிய  விழிப்புணர்வை  மக்களுக்கு   எடுத்துக் கூறினார் கண் நீர் அழுத்த  சிறப்பு  மருத்துவர் அர்ச்சனா. முடிவில்  ஜெகதீஸ்வரி நன்றி உரை வழங்கினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment