Advertisment

காதல் கணவர் திடீர் மாயம் :மனைவி போலீசில் புகார்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி சொந்த ஊரான துறையூரில் வசித்து வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Husband Missing

காதல் கணவர் மாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை  தம்பதி இவர்களுது மகன் நடராஜ். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லிதோப்பு பகுதியில் மின்சார வாரியத்தில் கேங்மேனாக தற்காலிக பணியாற்றி வந்தார்.

Advertisment

அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் கொளஞ்சியம்மாள் மகள் பட்டதாரியான ரம்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், அங்கிருந்து சொந்த ஊரான திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே மங்கப்பட்டி புதூரில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 17-03- 2023 அன்று முதல் தனது கணவன் நடராஜ் காணவில்லை என காதல் மனைவி ரம்யா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த கணவர் காணவில்லை என காவல்துறையில் பெண் அளித்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment