போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை: திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்ட நபரான சண்முகசுந்தரம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட நபரான சண்முகசுந்தரம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

author-image
WebDesk
New Update
Trichys

திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் என்பவர் தனது ஜெராக்ஸ் கடைக்கு வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் நோக்கங்களைத் தூண்டும் நோக்கில் பேசியும், அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது.

Advertisment

அதன்பேரில் கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 14.12.20219 அன்று வளநாடு காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி குற்றம் சாட்டப்பட்ட நபரான சண்முகசுந்தரம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞராக சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா போக்சோ குற்றவாளி சண்முகசுந்தரம் என்பவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய். 60,000-ம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக வளநாடு காவல் நிலைய நீதிமன்ற முதல்நிலை காவலர் பாலசுப்பிரமணி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: