ரோடு ஷோ-வுக்கு 'நோ'... விஜய் பிரசாரம் தொடங்க மட்டும் போலீஸ் அனுமதி

செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் த.வெ.க தலைவர் விஜய், விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு

செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் த.வெ.க தலைவர் விஜய், விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு

author-image
WebDesk
New Update
Vijay TVK 3

த.வெ.க தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய், செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவர், முக்கிய நகரங்களில் ரோடு ஷோ மற்றும் திறந்த வேனில் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு வாகனம் ஒன்றும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் த.வெ.க தலைவர் விஜய், விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு சுமார் 11 மணியளவில் வருகை தருகிறார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ரோடு - ஷோ நடத்தக்கூடாது என சில கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். முன்னதாக இன்று த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட வழக்கறிஞர் பிரிவை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் விஜய் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: