New Update
/indian-express-tamil/media/media_files/KFruWR6UC3Thj5L6koLP.jpg)
ஜெ.பி.நட்டா
பாஜக கூட்டணியில் அங்கும் வகிக்கும் அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சி வந்துள்ளார்.
ஜெ.பி.நட்டா
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவினாலும் தற்போதைய நிலையில் அ.தி.மு.க, ம.தி.மு.க இடையேதான் நேரடி மற்றும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கும் வகிக்கும் அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகவும் ரோடு ஷோ நடத்துவதற்காகவும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா இந்து திருச்சி வருகின்றார்.
அவர் வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த பின்பு திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்து காவல்துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த காவல்துறையினர் திருச்சியின் பிரதான வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பொதுமக்கள் கூட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் வாகனப் பேரணிக்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும் என அனுமதியை மறுத்துவிட்டனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடியான அந்த சாலையில் வாகன பேரணி நடத்த இருந்த பா.ஜ.க தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.