திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

இந்த விபத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy - Pudukottai

திருச்சி - புதுக்கோட்டை சாலை விபத்து

திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நள்ளிரவு நேரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisment

சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே, காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர். இந்த கோர விபத்தில் விபத்தில் மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45) டிரைவர் கதிர் (47) ஆகியோர் சம்பவ இடத்திலேயே  பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: