/indian-express-tamil/media/media_files/2025/09/20/vijay-campaign-2025-09-20-11-49-50.jpg)
த.வெ.க தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், சொகுசு காரில் நாகை புறப்பட்டார்.
திருச்சியில் இருந்து மூன்று மணி நேரம் நாகை செல்ல ஆகும் என்ற நிலையில் 9.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விஜய் சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து 11 மணிக்கு திருவாரூர், நாகை மாவட்ட எல்லையில் அம்மையப்பன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது பிரச்சார வாகனத்தை சென்றடைந்தார். விஜய் தமது பிரச்சார வாகனத்தில் தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில் ஊர்ந்து சென்றார்.
திருச்சியில் எம்ஜிஆர் சிலையில் தமது பிரச்சாரத்தை துவக்கிய விஜய் நாகை புத்தூர் அருகே அண்ணா சிலையில் தமது இரண்டாவது கட்டப் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். கடந்த 2011 நாகையில் மீனவர்களுக்காக தமது மன்றம் மூலம் போராட்டம் நடத்திய விஜய் 14 ஆண்டுகள் கழித்து இன்று நாகையில் தமது கட்சி சார்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.