/indian-express-tamil/media/media_files/2025/09/17/tvk-vijay-nagapattinam-campaign-police-permission-tamil-news-2025-09-17-15-07-07.jpg)
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத்திற்காக தவெக தலைவர் விஜய் தனி விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு புறப்பட்டார்.
விமான நிலையத்திலிருந்து துவாக்குடி பைபாஸ் சாலை வழியாக நாகை புறப்பட்டார். விஜய் செல்லும் கார் எது என்பது தெரியாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் திருச்சி வந்ததை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திருச்சி விமான நிலையம் முன்பு கூடியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திருச்சி விமான நிலையத்திற்குள் பயணிகள், அலுவல் நிமித்தமாக செல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள், விஜய் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விமான நிலையம் வரும் வழியிலேயே வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நாகை புத்தூர் பகுதியில் அதிகாலை முதலே தொண்டர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என ஆயர் கணக்கில் திரண்டனர். விஜயை பார்க்கும் ஆவலில் பலரும் காலை ஐந்து மணிக்கு பிரச்சார பகுதிக்கு வந்த நிலையில், விஜய் சரியாக 11.30 க்கு நாகை சென்றடைய உள்ளார். குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.