Advertisment

த.வெ.க முதல் அரசியல் மாநாடு: காவல்துறை அனுமதி கிடைக்குமா? கட்சியினர் தீவிர ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Vijay TVK

தமிழக அரசியலில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் கொடுத்த நிலையில்', இது குறித்து காவல்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜய் லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தமிழ் சினிமாவில் தனது இறுதிக்கட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதன் காரணமாக கோட் படத்திற்கு வழக்கத்திற்கு மாறாக பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற தனி கட்சி தொடங்கிய விஜய், சில வாரங்களுக்கு முன்பு தனது கட்சியில் அதிகாரப்பூர்வ கொடியை அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழக கொடியில், யானை பயன்படுத்தப்பட்டது பெரும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே சமயம் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை எங்கு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. முதலில் மதுரையில் நடப்பதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை கிராமத்தில் வரும் செப்டம்பர் 23- ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி வேண்டி விழுப்புரம் காவல்துறைக்கு கட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு தொடர்பான காவல்துறையினர் எழுப்பிய 21 கேள்விகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளித்திருக்கும் நிலையில், தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் வரும் திங்கள் கிழமைக்குள் (செப்டம்பர் 9) மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது குறித்து பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காவல்துறை ஏதேனும் காரணம் சொல்லி அனுமதி மற்றும பாதுகாப்பு தர மறுத்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தை நாட தங்களது கட்சியின் வழக்கறிஞர் அணியினருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment