விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில் நேர மாற்றம்: திருச்சி கோட்ட அலுவலகம் அறிவிப்பு!

நிர்வாக காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trains cancelled diverted Madurai trichy mayiladuthurai tamil news

நிர்வாக காரணங்களால், விழுப்புரம் – திருச்சி மற்றும் திருச்சி ஈரோடு பயணிகள் ரயிலில் மாற்றம் செய்யப்பட்:ள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நிர்வாக பணிகள் மற்றும் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது பயணிகள் ரயில் நேர மாற்றம் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது நிர்வாக காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என்றும், திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில், தாமதமாக புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிவாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிர்வாக காரணங்களால், விழுப்புரத்தில் இருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில் (06891) திருச்சிக்கு காலை 9 மணிக்கு சென்றடையும் நிலையில், வரும் அக்டோபர் 28- ஆம்தேதி முதல் 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்.

அதேபோல் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (06611) வரும் அக்டோபர் 28-ந் தேதி முதல் காலை 7 மணிக்கு பதிலாக 7.20மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: