/indian-express-tamil/media/media_files/2025/05/15/azpj1zgDjluiSdTLbtdG.jpg)
நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழுப்புரம் - சென்னை சாலை அண்ணாமலை ஹோட்டல் முதல் ஜானகிபுரம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகளும் போக்குவரத்தில் நெரிசலில் அன்றாடம் சிக்கித் தவிக்கும் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்
விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை சாலை முதல் நேருஜி ரோடு, மற்றும் ஜானகிபுரம் வரை நெடுஞ்சாலை ஓரம் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தன்ராஜ், உதவி பொறியாளர் கௌதம், ராதிகா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது
ஆக்கிரமிப்புகள் அகற்றும் இடத்தில் விழுப்புரம் நகர காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கல்பனா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஜயரங்கன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் விழுப்புரம் நேருஜி சாலையில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் முறையாக நோட்டீஸ் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் இரு தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற போகிறோம் என்கிற எச்சரிக்கை அறிவிப்பு செய்தும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் விழுப்புரம் சிக்னல் முதல் கோலியனூர் கூட்ரோடு வரை உள்ள சாலையில் முழுமையாக இன்று முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறையில் இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகளும் போக்குவரத்தில் நெரிசலில் அன்றாடம் சிக்கித் தவிக்கும் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.