நியாயவிலை கடை கட்டுமான பணிகளை தொடங்க கோரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டியலினத்தவர்

தங்கள் பகுதிக்கு தனி நியாயவிலை கடை வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது,

தங்கள் பகுதிக்கு தனி நியாயவிலை கடை வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது,

author-image
WebDesk
New Update
Tamilnadu Vilu

நியாயவிலைக்கடை கட்டுமான பணிகளை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி இருந்தை கிராம பட்டியலின மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட மணக்குப்பம் மதுரா இருந்தை கிராமத்தில், பொது இடத்தில் கட்டப்பட்டு வரும் நியாவிலை கடை கட்டிட பணியை, அதே பகுதியைச் சார்ந்த கனியன் மகன் நீலகண்டன் என்ற தனிநபர், அந்த இடம் நீர்வழி புறபோக்கு எனக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலத்தில் மனு கொடுத்து, நியாவிலை கடை கட்டுமான பணி தற்போது தடுத்து நிறுத்தபட்டு உள்ளது.

இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சுமார் 4- கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் தொடர்ந்து சிரமமடைந்து வந்தனர். இதனால் தங்கள் பகுதிக்கு தனி நியாயவிலை கடை வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது,

தற்போது கட்டிடப் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியை தடுத்து நிறுத்தியவர் மீது நடவடிக்கை எடுத்து, கட்டிடப் பணியை தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisment
Advertisements

முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பாபு ராஜேந்திரன் விழுப்புரம்

Villupuram Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: