விழுப்புரம் அருகே மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளர் மணிமாறன் காவலர்கள் தலைமையில் அனுமந்தை பழைய டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனது. அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர்,புதுச்சேரி மாநிலம் முத்திரை பாளையம், மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் தமிழரசன்(35) என தெரியவந்தது இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்து, சுமார் 2 கிலோ 135 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மதிப்பு ரூபாய் 21,350/-