புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தனி அறை அமைத்து90 எம் எல் பிராந்தி கடத்திய வரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர்கள் தலைமையில் மதுரபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மாநில மது பானங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்ர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வண்டியை ஓட்டி வந்தவர் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெரு ராஜகோபால் என்பவரின் மகன் நாகராஜ் (45) என்பது தெரியவந்தது. இதனையடுது்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்