/indian-express-tamil/media/media_files/2025/09/25/poll-2025-09-25-20-40-44.jpg)
மூதாட்டி தவறவிட்ட பணத்தை ரூ14500 பணத்தை 48 மணி நேரத்தில் மீட்டு அவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஆமூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி அஞ்சாயிரம் (60), கடந்த 23.9. 2025 தேதி அன்று திருவெண்ணைநல்லூர் கூட்டுறவு வங்கியில் இருந்து ஒ.ஏ.பி மற்றும் 100 நாள் வேலையில் சம்பாதித்து சேர்ந்து வைத்திருந்த ரூ14,500/- பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு வரும் வழியில் தவறவிட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தரும்படி திருவெண்ணைநல்லூர் காவல் காவல் நிலையத்தில் காவல்துறையிடம் சென்று கூறினார்
இதைத்தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி, முதல் நிலை காவலர்கள் பழனி மற்றும் அய்யனார் ஆகியோர்கள் தலைமையில் அப்பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து தவறவிட்ட பணத்தை கண்டறிந்து மீட்டு ரூபாய் 14,500 /- பணத்தை இழந்த மூதாட்டியிடம் ஒப்படைத்தனர் பணத்தை மீட்டு தந்த காவல் துறைக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.