/indian-express-tamil/media/media_files/2025/08/15/publishingd-2025-08-15-23-35-27.jpg)
விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தமிழக அரசால் அதே நவீன வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்ட குயிக் ரெஸ்பான்ஸ் டீம் (QUICK RESPONSE TEAM) என்ற இரண்டு அதி நவீன ரோந்து வாகனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன் இன்று வாகனங்களை பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவங்கி வைத்தார்.
வாகனத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நான்கு பக்க கேமராக்கள், ஆடியோ, வீடியோ, ஒலிபெருக்கியும், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு முதல் நிலை காவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் இவ்வாகனத்தில் ரோந்து பணியில் இருப்பார்கள். இவ்வாகனம் விழுப்புரம் உட்கோட்டம் மற்றும் கோட்டகுப்பம் உட்கோட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் இருப்பார்கள்.
குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றங்களை உடனுக்குடன் கண்டறியவும் இவ்வாகனம் மற்றும் காவலர் அடங்கிய குழு செயல்படுவார்கள். என எஸ் பி சரவணன் தெரிவித்தார்
பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.