பண்ருட்டியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மைக் செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்!

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமஜெயம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்வேலி என்எல்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமஜெயம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்வேலி என்எல்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

author-image
WebDesk
New Update
Accidh

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட காட்டு கூடலூர் கிராமத்தில் நேற்று மாலை 4.40மணி அளவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலமுருகன் கோயிலுக்கு அருகில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். விநாயகர் சிலை  வழிபாட்டிற்காக அதே ஊரை சேர்ந்த அரசப்பன் மகன் ராமஜெயம் (17)என்பவர் மைக் செட் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ராமஜெயம் பரிதாபமாக பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமஜெயம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்வேலி என்எல்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: