Advertisment

7 ஆண்டுக்கு பின் கொடநாடு செல்லும் சசிகலா : ஜெயலலிதா சிலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கொடநாடு எஸ்டேட்டில் அமைய உள்ள ஜெயலலிதா சிலைக்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், 7 ஆண்டுகள் கழித்து வி.கே.சசிகலா கொடநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
VK Sasikala KOdanad

வி.கே.சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர். பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்தார். 

Advertisment

அதன் பிறகு 2017"ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நிகழ்ந்தது முதல் சசிகலா அங்கு செல்லாமல், இருந்து வநத நிலையில், தந்போது கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வின் சிலை அமைக்கப்பட உள்ளது. அதன் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொல்வதற்காக சசிகலா செல்கிறார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோடநாடு புறப்பட்டார். அவருடன் இளவரசியும் உடன் சென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V K Sasikala tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment