Advertisment

மீண்டும் கனமழை... கடலோர மாவட்டங்கள் உஷார்!

கடந்த 24 மணிநேரத்தில் தென்காசி, ஒட்டப்பிடாரம், வீரகனூர் மற்றும் செங்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் 4 செ.மீ அளவு மழைப் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Tamilnadu weather forecast chennai rain report today tamil news 

Tamilnadu weather forecast chennai report

Tamilnadu Weather Report Today Tamil News: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த மாதம் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், நவம்பர் 1-ம் தேதி முதல் தற்போது வரை எப்போதும் இருக்கும் இயல்பு நிலையைவிட 44 சதவிகிதம் குறைவாக மழைப் பதிவாகியுள்ளது. பொதுவாக இந்தக் காலகட்டத்தில் 25 செ.மீ மழைப் பதிவாகும். ஆனால், தற்போது வரை அதிகபட்சமாக 13 செ.மீ அளவு வரையே மழைப் பதிவாகியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

Advertisment

மாவட்ட வாரியாகவும் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகப் பதிவாகி உள்ளது, குறிப்பாகச் சென்னையில் 15 சதவிகிதம் குறைந்து பதிவாகி உள்ளது. மீண்டும் வருகிற 11-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை முதல்  நாகை வரையிலான கடலோர பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், நவம்பர் மாத பிற்பகுதியில், கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.

தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் தென்காசி, ஒட்டப்பிடாரம், வீரகனூர் மற்றும் செங்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் 4 செ.மீ அளவு மழைப் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Tamilnadu Weather Chennai Weather Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment