Advertisment

தவிக்கும் மக்கள்; வெப்பநிலை 9 டிகிரி அதிகரிப்பு: சேலத்தில் 107 டிகிரி வெயில் பதிவு

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் நேற்று 107 டிகிரி வெயில் பதிவு.

author-image
WebDesk
New Update
summer 5 - unsplash (1)
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடுமையான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப். 7)வறண்ட வானிலை நிலவும்.தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 

Advertisment

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் பதிவு 

நேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 107டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் தலா 106, திருச்சி, வேலூர், தருமபுரி, ஈரோட்டில் தலா 105, நாமக்கல், திருத்தணியில் தலா 104, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 103, கோவை, தஞ்சாவூரில் தலா 102, பாளையங்கோட்டையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் என 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் வழக்கத்தை விட 5 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை  அதிகரித்துள்ளது. இதில் வழக்கத்தை விட 8 டிகிரிக்கு மேல் தருமபுரி, கரூர் மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. அதனால் இவ்விரு மாவட்டங்களில் வெப்ப அலை நிலவியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment