Advertisment

சென்னையில் இன்னும் மழை இருக்கு... மற்ற மாவட்டங்கள் நிலை என்ன? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னையில் இன்னும் மழை இருக்கு... மற்ற மாவட்டங்கள் நிலை என்ன? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில், நேற்று  வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசிய வீசியது. தொடர்ந்து இன்று காலை  சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர், முகப்பேர், அண்ணாநகர், விருகம்பாக்கம், செங்குன்றம், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கடும்வெயிலால் அவதிப்பட்ட சென்னை வாழ் மக்கள் இந்த மழை காரணமாக பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெப்ப சலனம் காரணமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய பகுதிகளில் வெப்பச்சலனம் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக சென்னையில் இன்றைய மழையை விட நாளையும் கனமழை பெய்யக்கூடும் என பதிவிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு தினம் மழை பொழிவுடன் சிறப்பாக தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு முழுவதும் வறட்சி நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கும் என மக்கள் நம்பும் நிலையில், கடந்த வடகிழக்கு பருவமழை நல்ல பலனை கொடுத்த நிலையில் கோடையிலும் மழை பெய்வது வளங்கள் செழிக்கும் என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Weather Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment