அடுத்த 5 நாட்கள் இயல்பை விட 2 - 3 டிகிரி வெப்பம் அதிகம்: மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்

author-image
WebDesk
New Update
heat

தமிழகத்தில் வரும் 5 நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். இதனால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது

மே 4 முதல் கத்திரி வெயில் தொடக்கம்!

ஏப்ரல் 22 முதல் 27 வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், வெப்பநிலை இயல்பை விட 2°–3°C அதிகரிக்கும். மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கி, வெப்பம் மேலும் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: