வட தமிழகத்தின் மேல் திரளும் பெரிய மேகப் பந்து; கன மழை எந்த தேதிகளில்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ra tn

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கி உள்ளது. நேற்று சென்னை மற்றும் புறநகர், கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், அக்டோபர் 16ம் சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

463108843_1097495855076458_8134343540109401933_n

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், வட தமிழகத்தின் மேல் மேகப்பந்து உருவாகி வருவதால் சென்னையில் மழை பெய்து வருகிறது. எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். இரவு முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

இன்று பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் சென்று வரலாம். மிக கனமழைக்கான முக்கிய தேதிகள் வந்து கொண்டிருக்கிறது. 

Advertisment
Advertisements

காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை  நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 16,17ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: