தமிழ்நாடு மற்றும் கேரளாவில், பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமமழை பெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில், அடுத்த 3 மணிநேரத்திற்கு, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிதமான மழை பொழியக்கூடும். தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கேரளாவில் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 11 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையெ, வெளியூர் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள், எங்கு செல்லலாம்? எங்கு செல்லக்கூடாது? பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற இடங்கள் எவை என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, ஜூன் 4 வரை பொருந்தும், என்றும் அதன் பின்னர் மழை குறைகிறது. எனவே அதற்கேற்ப திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொடை மற்றும் குன்னூர்-கெட்டி பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து திறக்கிறது, அங்கு தீவிர மழை பெய்யாது. நீலகிரியில், அவலாஞ்சி, பந்தலூர், அப்பர் பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, தேவாலா, ஓவலி, நெல்லியம், முகூர்த்தி, போர்த்திமண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகள் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த பகுதிகளில், சீரான சாதாரண மழை பெய்யும், இருப்பினும் சீரான மழை காரணமாக இடங்களைக் காண முடியாது.
கோயம்புத்தூர் வால்பாறையில் வால்பாறை, சோலையார், உள்ளிட்ட பகுதிகளை தவிர்க்க வேண்டும். பொள்ளாச்சி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள் பாதுகாப்பான இடங்களாக உள்ளது. பொள்ளாச்சியில் மழை பெய்தாலும், வால்பாறையில் இருப்பது போல் தீவிர மழை பெய்யாது. தமிழ்நாட்டில் உள்ள, ஏலகிரி, ஏற்காடு, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, கொடைக்கானல் ஆகிய மற்ற மலைப்பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன.
அதேபோல் கேரளாவில், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, வாகமன், பீர்மேடு, இடுக்கி ஆகியவை தவிர்க்க வேண்டிய பகுதிகள், திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொன்முடி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் கவி மற்றும் மலைகளில் உள்ள மற்ற பகுதிகள், கோட்டயம் மாவட்டத்தில், முண்டகாயம், பூஞ்சார், குமார்கோம், கோட்டயம், வைக்கம் மற்றும் மலைகள் திருச்சூர் மாவட்டத்தில், இடைமலையார், அதிரப்பள்ளி மற்றும் மலைகள் காசர்கோடு, கோழிக்கோடு மலைப்பகுதிகள், கண்ணூர் மலைப்பகுதிகளும் தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல், வயநாடு மாவட்டத்தில், வைத்திரி, பூக்கோட், லக்கிடி மற்ற இடங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் கூர்க் மாவட்ட மலைப் பகுதிகள், உடுப்பி மலைப் பகுதிகள், ஷிமோகா மாவட்ட மலைப் பகுதிகள், சிக்மகளூர், ஹாசன், உத்தர கன்னட மலை, மங்களூர் மாவட்டப் பகுதிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.