தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுளள் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தீபாவளி கொண்டாட்டம் மழையில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தமிழக கடற்கரைக்கு அருகில் இரண்டு வானிலை அமைப்புகள் நிலவி வருவதால், தமிழகத்தில் வடகிழக்கு பவருமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதில் நேற்று (அக்டோபர் 30)கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தீபாவளி நாளில் இருந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கும் மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
மன்னார் வளைகுடா பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை மீண்டும் தொடங்கியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையின் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (அக்டோபர் 30) மதியம் முதல் கனமழை பெய்து வருவதால், சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில், பாடி மற்றும் கோயம்பேடு இடையே உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் தண்ணீர் தேங்கியது.
வில்லிவாக்கத்தில் உள்ள தானியங்கி மழைமானியில் மதியம் 2 மணி நேரத்தில், 10 செ.மீ கனமழை பதிவானது. காரைக்காலில் மாலை 5.30 மணி வரை 6 செ.மீ. நுங்கம்பாக்கம் (5 செ.மீ.) மற்றும் ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் (4 செ.மீ.) ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. இது குறித்து சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, அண்ணாநகர் மேற்குப் பகுதியில் மதியம் முதல் 1 மணி வரை (9 செ.மீ.) கனமழை பெய்தது. புதிய மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமிஞ்சிக்கரை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் இன்று காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் பி.செந்தாமரை கண்ணன் கூறுகையில், வானிலை அமைப்புகள் மேற்கு நோக்கி நகரும் போது, மழை மேகங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உள் பகுதிகளுக்கும் மாவட்டங்களுக்கும் மாறும். தற்போது நிலவும் வானிலை சீர்கேடுகளின் தாக்கத்தால் தமிழகத்தில் 4-5 நாட்களுக்கு ஈரமான வானிலை தொடரும். கிழக்கு திசையில் வீசும் காற்று மற்றும் இரண்டு வானிலை அமைப்புகள் மழைப்பொழிவை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே தீபாவளி நாளில் கரூர், வேலூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட 15 உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல இடங்களில் மழை பெய்யும் அதே வேளையில், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக தீவிரத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், சென்னைக்கும் இந்த ஆண்டு ஈரமான தீபாவளியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil