தமிழகத்தில் வருகின்ற மே18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழை பெய்வதால் இந்திய வானிலை ஆய்வும் மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தஞ்சவூர் மாவட்டம் – அதிராபட்டினத்தில் 10.30 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறையில் 5.8 செ.மீ மழையும், விருதுநகர் மாவட்டத்தில் 5 சே.மீ மழையும், நாகை மாவட்டத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.
17.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.05.2024 மற்றும் 21.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.