தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற போட்டியின்போது, மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்து ஆரவாரம் செய்தலால் சலசலப்பு ஏற்பட்டது,
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான தொடர், சென்னை கோவை உள்ளிட்ட சில மாவட்ட மைதனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கோவையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை அணியும் , மதுரை அணியும் பலப்பரீட்சை நடத்தின. விளையாட்டு மைதானத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மைதானத்திற்குள் த.வெ.க கொடியை கொண்டு வந்து ரசிகர்கள் அமரும் இடத்தில் இருந்து காண்பித்தூ அசைத்தார். இதனைப் பார்த்த மற்ற ரசிகர்கள் சிலரும் டி.வி.கே டி.வி.கே என கோஷம் எழுப்பினர்.
இதை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் த.வெ.க கொடியை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.