இதை செய்யாவிட்டால்… தி.மு.க கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்: த.வா.க தலைவர் வேல்முருகன் தடாலடி

தி.மு.க ஆட்சியில் தனது தொகுதிக்குள் பொதுப்பணித்துறை சார்ந்த எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை என்று கூறியது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க ஆட்சியில் தனது தொகுதிக்குள் பொதுப்பணித்துறை சார்ந்த எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை என்று கூறியது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Velmurugan xy

தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சமீபத்திய நடவடிக்கைகளில் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வா.க தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர் வேல்முருகன். இவர் தி.மு.க மீதும், தி.மு.க அரசு மீதும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Advertisment

வெள்ள நிவாரணமாக ரூ.2,000 வழங்குவது பிச்சை போடுவது போல் இருக்கிறது. 4 ஆண்டு தி.மு.க ஆட்சியில் தனது தொகுதிக்குள் பொதுப்பணித்துறை சார்ந்த எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை என்றார். சட்டமன்றத்தில் பேசிய போது, இவருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே மோதல் எழுந்தது. 

இவ்வாறு இருக்க, தற்போது தி.மு.க கூட்டணி பற்றியே மறுபரிசீலனை செய்வோம் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் வேல்முருகன் கூறியுள்ளார். 

புயல் வெள்ளம் வரும்​போதெல்​லாம் கெடிலம் மற்றும் தென்​பெண்ணை ஆறுகளுக்கு நடுவில் அமைந்​துள்ள எனது பண்ருட்டி தொகு​தி​தான் சின்​னாபின்ன​மாகிறது. சாத்​தனூர் அணையைத் திறந்​து​விட்​டாலோ, கனமழை​யால் காட்​டாற்று வெள்ளம் ஏற்பட்​டாலோ கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறோம்.  அப்படி இருக்கை​யில், வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிர​மாவது கொடுக்க வேண்​டும். அதில்​லாமல் ரூ.2 ஆயிரம் கொடுப்பது பிச்சை போடுவது மாதிரித்​தானே. அதைத்​தான் அப்படிச் சொன்னேன். இந்த பாதிப்​பைத் தடுக்க அரசூரில் தடுப்பணை கட்ட வேண்​டும் அதிமுக, திமுக அரசுகளிடம் போராடி வருகிறேன்.

Advertisment
Advertisements

எனக்கு 3 விஷயங்களில் சமரசமே கிடை​யாது. ஒன்று, சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி சமூகநீ​தியை உறுதி செய்ய வேண்​டும். இரண்​டாவது, தனித்​தமிழீழ அரசை உருவாக்கு​வதற்கு பொது​வாக்​கெடுப்பு நடத்துவது மற்றும் இனப்​படு​கொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும் என்பதாகும். 

எனது பண்ருட்டி தொகு​தி​யில் நிரந்த வெள்ள தடுப்புப் பணிகள், கலைக் ​கல்​லூரி, வேளாண் கல்லூரி தொடங்க வேண்​டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எனது போர்க்​குரல் தொடரும். 

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்​கண்ட 3 கோரிக்கைகள் குறித்த அறிவிப்​பை​யும், அதற்கான விரிவான செயல் திட்​டத்​தை​யும் வெளியிட வேண்​டும். இல்லா​விட்​டால், பொதுக்​ குழு​வைக் கூட்டி, திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கலாமா, வேண்​டாமா என்று மறுபரிசீலனை செய்து முடி​வெடுப்​போம் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: