கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார்; விஜய் மீது த.வா.க-வினர் புகார்

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Vijay vs velmurugan

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வழக்கறிஞர் சிவமூர்த்தி, நடிகர் விஜய் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுகளை வழங்கி, கௌரவப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பரிசுகள் வழங்கும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜய்யை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் ஒரு பொதுக்கூட்டத்தில் இது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், "இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே... பெற்றோர் ஒரு வயதுப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்கப் போகும் கல்லூரிப் பெண்களை அழைத்துச் செல்கிறார்கள்... அறிவு வேண்டாம் தமிழனுக்கு. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை... நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை... அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது... ஒரு சினிமா கூத்தாடி பயலைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிக்கிறார்கள். இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படிலாம் செய்யக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

வேல்முருகன் மீது த.வெ.க புகார் 

வேல்முருகனின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்தார். அவர்மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்ற த.வெக.வின் புகாரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு சபாநாயகர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் மீது த.வா.க-வினர் புகார்!

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வழக்கறிஞர் சிவமூர்த்தி, நடிகர் விஜய் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டதாவது:

"நடிகர் ஜோசப் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஜூன் 28 ஆம் தேதி திருவான்மியூரில் நடந்த பள்ளி பொதுத் தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், மாணவிகளை அழைத்து அவர்களை அணைப்பதும், அனுமதியின்றி தொடுவது மற்றும் முறைகேடாக நடந்தது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதை பல கோடி மக்கள் பார்த்து பெண் குழந்தைகளைத் தொடுவது தவறில்லை என்று கருதி தொடக்கூடும். இதனால், சமுதாயத்தில் இளைஞர்களும், மற்றவர்களும் நடிகர் ஜோசப் விஜய் செய்கையைப் பார்த்து அதேபோல் செய்ய முற்படுவார்கள். அதனால், சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் மற்றும் கலாசார சீர்கேடு ஏற்படுவது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது என்றால், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். ஆதலால், இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார், விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: