Advertisment

எதிர்பாராத திடீர் மழை; தமிழகத்தில் 2,500 மெகாவாட் குறைந்த மின் தேவை

திங்கட்கிழமை, தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 15,545 மெகாவாட்டை எட்டியது.

author-image
WebDesk
New Update
Electricity tariff hike in Tamil Nadu

வேளாண், குடிசை இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்கிறது.

தமிழகத்தில் எதிர்பாராத விதமாக பெய்த மழை, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு, மாநிலத்தில் மின்சாரத் தேவையையும் குறைத்துள்ளது.

Advertisment

கடந்த சில நாட்களாக மாநிலம் மின் தேவையில் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது, ஆனால் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மின் தேவை குறைந்தது. சனிக்கிழமை அதிகபட்ச தேவை 17,172 மெகாவாட்டாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 14,027 மெகாவாட்டுடன் 3,000 மெகாவாட் குறைந்தது.

திங்கட்கிழமை, தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 15,545 மெகாவாட்டை எட்டியது.

அதிகபட்சமாக 388 மில்லியன் யூனிட்கள் குறைந்து திங்கள்கிழமை 326 மில்லியன் யூனிட்க்கு வந்தது. இதுவரை, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் 16 அன்று 18,053 மெகாவாட் மின்சாரத் தேவை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கோடை மழை, பகல் வெப்பநிலையை இயல்பை விட ஒரு டிகிரி அல்லது இரண்டு டிகிரி குறைத்து, மார்ச் 17 முதல் இரவுகளை சிறிது குளிராக மாற்றியது. இதனால் மாநிலத்தில் மின் தேவையும் குறைந்தது.

மார்ச் 25 வரை தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment