/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-01T100204.655.jpg)
மின் கட்டண குளறுபடிகளை தவிர்க்க புளூடூத் மீட்டர்; தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய முயற்சி
TANGEDCO - power tariff Tamil News: தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அடுத்த 5 ஆண்டிற்கு வருடத்திற்கு 6 சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தியது. மேலும், அதற்கான ஒப்புதலையும் வழங்கி இருந்தது.
மின் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 'வீடுகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது; விவசாயம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட்டிற்கு, 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயரும்' என்று தமிழ்நாடு மின்வாரியம் விளக்களித்தது.
பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமின்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, யூனிட் ஒன்றுக்கு ரூ.11ல் இருந்து ரூ.11.25 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.