டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்: 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
lpg tanker lorry

எல்.பி.ஜி டேங்கர் லாரி ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பாட்டிலிங் பிளான்டுகளுக்கு துறைமுகங்களில் இருந்து டேங்கர்களில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 4,000 லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாற்று ஓட்டுநர் அல்லது கிளீனர்கள் இல்லாதபட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம், ஏதேனும் சிறு விபத்து ஏற்பட்டால் அந்த லாரிகள் 3 ஆண்டுகளுக்கு டெண்டரில் பங்கேற்க முடியாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் மார்ச் 27 ஆம் தேதி முதல் தென்னிந்தியாவில் 4 ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஓடாது என எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல்லில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த போராட்டத்தின் மூலம் "6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வருவாய் இழப்பை காட்டிலும் வேலைவாய்ப்பு பறி போகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்" என்றார்.

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறினார்.

Strike Lpg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: