/indian-express-tamil/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-2025-09-09-15-39-23.jpg)
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மதுபான கடைகள் மூடப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப. வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10.9.2025 அன்று சிவகங்கை மற்றும் மானாமதுரை காவல் உட்கோட்டத்தில் உள்ள 29 டாஸ்மாக் அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (FL-1) மற்றும் 3 மதுபான கூடங்கள் (FL-2) மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் இயங்கும் அனைத்து டாஸ்மாக் சில்லரை கடைகள், எப்.எல்.2 / எப்.எல்.3 மதுபான கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.