டாஸ்மாக் முறைகேடு வழக்கு: துணை பொது மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
tasmac

Tasmac corruption case

டாஸ்மாக் நிறுவனத்தில் ₹1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். மதுபானங்கள் கொள்முதல் செய்ததில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக விசாகன் வீடு உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையின் முடிவில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு தனியார் மதுபானத் தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, சில நாட்களுக்கு முன்பு மதுபான ஆலை நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின் முடிவில், சுமார் ₹1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேட்டில் வசிக்கும் தனியார் மதுபான நிறுவனத்தின் பிஆர்ஓ மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, தி.நகரில் உள்ள கேசவன் வீடு, சாஸ்திரி நகரில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டில் உள்ள பாபு வீடு மற்றும் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட சென்னை முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisment
Advertisements

இரண்டு நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனைகள் நேற்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தன. இந்த சோதனைகளில், ₹1,000 கோடி முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து டெண்டர் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனையின்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி இருப்பது இந்த வழக்கு விசாரணையில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், இந்த முறைகேடு தொடர்பான மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: