கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.2,488 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, 2024 - 2025-ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ரூ.48,344 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.2,488.30 கோடி அதிகமாகும்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 2021-22-ம் ஆண்டில் ரூ.36,050.65 கோடியாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.44,121.13 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டில் ரூ.45,855.70 கோடியாகவும், 2024-25 (மார்ச் வரை) ரூ.48,344.00 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இந்த வருவாய் உயர்வுக்கு காரணம், மதுபானங்களின் விலை உயர்வு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கொள்முதல் விளக்கம் ஆகியவை என்று கூறப்படுகிறது.