/indian-express-tamil/media/media_files/Xgt2QsRZ3h7jEO2j2N3j.jpg)
தமிழ்நாட்டில் இந்தத் தேதிகளில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
Lok Sabha Election | Tasmac | மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுக்க 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, ஏப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, ஏப்.17ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.19ஆம் தேதி மாலை 6 மணிவரை 3 நாள்கள் டாஸ்மாக் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
வாக்குப்பதிவின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
முன்னதாக கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.